விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘Baakiyalakshmi’. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே!
கடந்த எபிசோடின் இறுதியாக கோபி வீட்டுக்கு செழியனின் குழந்தைக்குப் பெயர் வைக்கும் விழாவுக்கு எல்லோரும் வருகிறார்கள். கிறிஸ்துவரனா ஜோசப் எங்கப் பொண்ணு ஜெனியோட குழந்தைக்குத்தான் நாங்க ஏற்கெனவே பேர் வெச்சிட்டோமே… நீங்க என்ன திரும்ப பெயர் வைக்கிறீங்க என பிரச்சனையைக் கிளப்ப, ஈஸ்வரியோ, ”செழியனோட குழந்தை எங்க வீட்டு வாரிசு நாங்க எங்க விருப்பப்படி தான் பேர் வைப்போம்” என்று சொல்ல ஜோசப் அப்படியெல்லாம் நடக்காது நாங்க தான் பேர் வைப்போம் என்று சொல்கிறார். இப்படி வாக்குவாதம் வலுக்க பழனிச்சாமி குடும்பத்தினர் வீட்டுக்கு வர அதன் பிறகு ஈஸ்வரி தன் மனதில் இருக்கும் பெயரை சொல்ல, ஈஸ்வரி குழந்தையின் பெயரை சொல்லப்போகும் சமயத்தில் ஜோசப் மீண்டும் வாக்குவாதம் செய்யத்தொடங்க, பழனிச்சாமி இப்படி எல்லாம் பண்ணீங்கன்னா நாளைக்கு அந்த குழந்தை எனக்கு பேர் வைக்குற ஃபங்க்ஷனிலேயே இரண்டு குடும்பமும் சண்டை போட்டுக்கிச்சனு நெனச்சு கவலைப்படுமா படாதா? என்று நாசுக்காக பேசி ஜோசப்பை அமைதியாக்குகிறார்.
![‘’பார்த்து பேபிக்கு ஏதாவது ஆக போகுது’’... பங்க்ஷனில் உளறி மாட்டிய கோபி.. ‘Baakiyalakshmi’ இன்றைய ஹைலைட்ஸ்! 2 Baakiyalakshmi serial](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-06-at-11.50.26-AM-1024x704.jpeg)
அதன் பிறகு ஈஸ்வரி யாழினி என்ற பெயரை சொல்ல அந்த பெயர் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இதனால் நல்லபடியாக பெயர் சூட்டு விழா நடந்து முடிகிறது.
அடுத்ததாக சாப்பிட்டுவிட்டு எல்லோரும் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும்போது ராதிகா எழுந்து ரூமுக்கு செல்ல தவறி கீழே விழப் போகும்போது கோபி ஓடிப்போய் பிடித்து பார்த்து பார்த்து பேபிக்கு ஏதாவது ஆகிட போகுது என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நான் ராதிகா பேபியை சொன்னேன் என்று சொல்லி சமாளிக்கிறார் கோபி. எல்லோரும் தலையில் அடித்துக் கொள்ள ராமமூர்த்தி கோபியை பிடித்து திட்டுகிறார்.
![‘’பார்த்து பேபிக்கு ஏதாவது ஆக போகுது’’... பங்க்ஷனில் உளறி மாட்டிய கோபி.. ‘Baakiyalakshmi’ இன்றைய ஹைலைட்ஸ்! 3 Baakiyalakshmi serial](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-06-at-11.50.28-AM-2-1024x715.jpeg)
அதன் பிறகு தனியாக இருக்கும் ஈஸ்வரியை கோபி ”வாங்க அம்மா வெளிய போயிட்டு வரலாம்” என்று கூட்டி செல்கிறார். உனக்கு ஏதாவது பிரச்சனையா என்று விசாரிக்க கோபி ஷாக் ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிகிறது.