Home Serial ராதிகா கர்ப்பம் என சொல்லத்துடிக்கும் கோபி… ‘Baakiyalakshmi’ இன்றைய எபிசோட்!

ராதிகா கர்ப்பம் என சொல்லத்துடிக்கும் கோபி… ‘Baakiyalakshmi’ இன்றைய எபிசோட்!

by Santhiya Lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் Baakiyalakshmi. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனி ரூமில் இனியா குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க செழியனும் ரூமுக்கு வர, இனியா ஜெனி – செழியனிடம் ”பாப்பாவை நான் கொஞ்ச நேரம் வச்சுட்டு இருக்கேன்” என்று சொல்லி குழந்தையை வெளியே தூக்கிக்கொண்டு போகிறாள். அதன்பிறகு செழியனும் ஜெனியும் பேசும்போது செழியன் ஆபீஸ் ஃபிரண்ட்ஸுடன் ட்ரிப் போகப்போகும் விஷயத்தைப் பற்றி சொல்ல இதை ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லல என்று கேள்வி கேட்கிறாள் ஜெனி. ”நீ போக வேண்டாம்” என்றும் சொல்கிறாள். செழியன் ”நான் அவங்ககிட்ட வரேன்னு சொல்லிட்டேன்” எனச் சொல்லியும் ஜெனி ”நீ போக வேண்டாம்… நாங்க இங்க தனியா இருக்க நீ மட்டும் ட்ரிப்புக்கு போவியா? உன்ன தனியா அனுப்பிட்டு நீ என்ன பண்றன்னு தெரியாம என்னால தவிச்சிட்டு இருக்க முடியாது” என்கிறாள் ஜெனி. செழியன் எவ்வளவோ பேசிப் பார்த்து ஜெனி நோ சொல்ல வேறு வழியில்லாமல் செழியன் ”சரி நான் போகல” என்கிறான். 

அதன் பிறகு ஈஸ்வரி, இனியா மற்றும் ராமமூர்த்தி சோஃபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க கீழே இறங்கி வரும் கோபி அம்மாவிடம்… ”அம்மா ஃப்ரீயா இருக்கீங்களா… வெளில அப்படியே ஒரு டிரைவ் மாதிரி கார்ல போயிட்டு வரலாமா” என ராதிகா கர்ப்பமாகயிருக்கும் விஷயத்தைச் சொல்வதற்காக கூப்பிடுகிறான். ”அப்படி என்னடா தனியா என்கிட்ட பேசணும்” என்று ஈஸ்வரி கேட்க அப்போது ஈஸ்வரிக்கு ஒரு போன் வருகிறது. போனில் சீதா ”நாளைக்கு செழியன் பாப்பாவுக்கு பெயர் வைக்க போறோம் அந்த பங்க்ஷனுக்கு நீங்க கண்டிப்பா வரணும்” என்று சொல்கிறாள். கோபி ”என்னது செழியன் பாப்பாவுக்கு பெயர் வைக்கப் போறோமா” என்று கேட்க ராமமூர்த்தி குழந்தை பிறந்தால் பேர் வச்சு தானே ஆகணும் என்று சொல்கிறார். 

ஈஸ்வரி ”ஆமாம்பா… நான் தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்… நாளைக்கு தான் ஃபங்க்ஷன்… நீ பொறுப்பான தாத்தா வா முன்னாடி வந்து நில்லு” என்று சொல்கிறாள். இனியா உடனே ”பாட்டி… டேடியை தாத்தான்னு சொல்றதுகூட க்யூட்டா இருக்குல்ல” என்று கலாய்க்கிறாள். அதன் பிறகு பாக்யாவிடம் இனியா வெளியே போகணும் என்று சொல்ல கோபி நான் கூட்டிட்டு போறேன் என்று பேசி இனியாவை அழைத்துச் செல்கிறான். 

காரில் போகும் போது காலேஜ் பற்றி பேச ஆரம்பிக்கும் கோபி ராதிகாவின் கர்ப்பம் குறித்து பேசலாம் என்று பேச்சை மாற்ற தொடங்குகிறான்.”ஏன்டா… செல்லம் உனக்கு நம்ம வீட்ல ஒரு தம்பி பாப்பாவோ… தங்கச்சி பாப்பாவோ இருந்தா எப்படி இருக்கும்” என்று கேட்கிறான். இனியா ”என்ன டாடி பேசறீங்க” என்று கேட்க ”இல்லடா சும்மாதான் கேட்கிறேன்” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்கிறான் கோபி. 

இனியா ”கன்றாவியா இருக்கும்” என்று கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள். ”ஏன் டாடி இப்படி கேக்குறீங்க… ஏதாச்சு குழந்தையை தத்தெடுக்க போறீங்களா இல்ல மயூவை வீட்டுக்கு கூட்டிட்டு வர போறீங்களா” என்று கேட்கிறாள். ”அவளை எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வராதீங்க டாடி… ஏற்கெனவே ராதிகா இங்கே இருக்கிறது எங்களுக்கு பிடிக்கல. அம்மா சந்தோஷமா இல்லாதப்ப நாங்க மட்டும் எப்படி சந்தோஷமாக இருப்போம்” என்று இனியா கோபியை அடுத்தடுத்துப் பேசி அதிர வைக்கிறாள். 

”நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது இல்லாம அவங்களையும் கூட்டிட்டு வந்து நம்ம வீட்டிலேயே வச்சுட்டு இருக்கீங்க… இதெல்லாம் நல்லாவா இருக்கு” என்று கோபியை நேருக்கு நேராக கேட்கிறாள் இனியா. ”உங்க காலேஜ்ல படிக்கிற யாருக்கும் சின்னதா தம்பி தங்கச்சி இல்லையா” என்று கோபியும் விடாமல் இனியாவிடம் கேட்க ”ஒரு பையனுக்கு 10 வயசு வித்தியாசத்தில் தம்பி இருக்கான்… அதுக்கே அவனை எல்லாரும் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவன் தம்பி அவனை படிக்க கூட விடமாட்டான். நல்லாவே இருக்காது” என்கிறாள். 

உடனே கோபி ”சரி பசங்க கிட்ட எல்லாம் பார்த்து பேசு… ஆம்பள பசங்க எல்லாம் அவ்வளவு நல்லவங்க கிடையாது” என்று சொல்ல ”நீங்க மட்டும் என்ன நல்லவரா” என்று அதிர்ச்சி கொடுக்கிறாள் இனியா. ”ஏன்டா செல்லம் ஏன் அப்படி சொல்ற நான் என்ன பண்ணேன்” என்று கோபி கேட்க ”ஆமா நீங்க ரெண்டாவதாக ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களையும் கூட்டிட்டு வந்து வீட்ல வச்சிருக்கீங்க… நீங்க நல்ல டாடியே கிடையாது… அம்மாவுக்கு நல்ல ஹஸ்பண்டா இல்லாத போது எங்களுக்கு மட்டும் எப்படி நல்ல அப்பாவா இருப்பீங்க” என்று ஷாக் மேல் ஷாக் கொடுக்கிறாள். 

இவளுக்கு மட்டும் ராதிகா கர்ப்பமாய் இருக்கிற விஷயம் தெரிஞ்சா என்ன சொல்லுவாளோ என்று கோபி உச்சகட்ட டென்ஷன் ஆகிறான். 

அதைத்தொடர்ந்து பாக்யாவும் செல்வியும் கிச்சனில் இருக்க பாக்யா ஜெனிக்காக ஜூஸ் போட பிறகு ராதிகா அவருக்காக ஜூஸ் போட போகும்போது கரண்ட் கட் ஆகிவிட ராதிகா அப்புறம் போட்டுக்கலாம் என நகரும்போது  பாக்கியா ஒரு நிமிஷம் என்று அவரை நிற்க வைத்து ஜெனிக்கு போட்ட ஜூசை கொடுக்கிறாள். ”நீங்க டயர்டா இருக்கீங்க ஜூஸ் குடிங்க… நான் ஜெனிக்கு ஃப்ரூட் கட் பண்ணி கொடுத்துக்கிறேன்” என்று சொல்கிறாள். ராதிகா ”வேண்டாம்” எனச்சொல்ல பாக்கியா ”பரவால்ல குடிங்க” என்கிறாள். 

பிறகு ராதிகா ரூமுக்கு சென்றதும் வேலைக்காரி செல்வி ”அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காத அப்புறம் எல்லாரும் உன் மேல ஏறி தாளம் தட்டுவாங்க” என்று அறிவுரை சொல்கிறாள். இதுதான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் நடந்தது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.