“நினைத்தேன் வந்தாய்” என்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் சுடர்விழி கேரக்டரில் நடிகையும், மாடலுமான Abhirami Venkatachalam நடிக்கவுள்ளார்.
சன் டிவி, விஜய் டிவி – க்கு அடுத்து தமிழில் சீரியலுக்கு பெயர்போன சேனல் என்றால் அது ஜீ தமிழ் தான். மக்களின் பொழுதுபோக்கிற்கு தொடர்ந்து சீரியல்கள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் “நினைத்தேன் வந்தாய்” சீரியலில் கணேஷ் வெங்கட்ராமன், கீர்த்தனா பொதுவாள், ஜாஸ்மின் ராத், அஞ்சலி ராவ், கனிஷ்கா விஜயகுமார், கௌஷிக் ஷிவானந்த், ரவி சங்கர் போன்றோர் நடித்து வந்தனர்.
டாக்டராக எழில் கேரக்டரில் கணேஷ் வெங்கட்ராமனும், அவரது மனைவியாக இந்துமதி கேரக்டரில் கீர்த்தனா பொதுவளும், இந்துமதியின் தங்கையாக சுடர்விழி கேரக்டரில் ஜாஸ்மின் ரத் – ம் நடித்து வந்தனர்.
எழில் மற்றும் இந்துமதிக்கு 4 குழந்தைகள் பிறந்து சந்தோசமாக இருந்து வரும் நிலையில் எழிலின் தோழி மனோகரி எழிலை அடைய வேண்டும் என்று சதி செய்து இந்துமதியை விபத்தில் சிக்கி இறக்கும்படி செய்துவிடுகிறாள்.
அம்மா இல்லாமல் 4 குழந்தைகளை எப்படி சமாளித்து வளர்ப்பது என்ற நிலையில் சுடர்விழி அந்த குழந்தைகளை பார்த்துக்கொண்டு வருகிறாள்.
கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சுடர்விழி கேரக்டரில் நடித்து வரும் ஜாஸ்மின் ரத் சீரியலில் இருந்து விலக்கவுள்ளதாக தெரிகிறது. அவருடைய கேரக்டரில் Big Boss நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Abhirami Venkatachalam நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
அபிராமி NOTA, களவு, நேர்கொண்ட பார்வை, வான் மூன்று போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2016 -ல் மிஸ் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றுள்ளார்.
இதற்க்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “வீரா” தொடரில் அபிராமி கேமியோ ரோலில் நடித்திருந்தார். தற்போது முழு நேரம் சீரியலில் நடிக்கவுள்ளார்.
அபிராமி நடிக்கும் காட்சிகள் விரைவில் “நினைத்தேன் வந்தாய்” தொடரில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.