சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘Ethirneechal’. இந்த சீரியலில் முதல் முறையாக பெண்கள் குணசேகரனை எதிர்த்து வெற்றி கண்ட நிலையில் இருந்து மாறி மீண்டும் பழையபடி பல்பு வாங்கி வருகின்றனர்.
![கரிகாலனுக்கு அடித்த யோகம்… குணசேகரன் கொடுத்த வார்னிங்… ‘Ethirneechal’ இன்றைய எபிசோட் அப்டேட்! 2 Ethirneechal](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/04/Untitled-design-66-1024x683.png)
இன்றைய எபிசோடும்(02-05-2024) அப்படி தான் இருக்கும் போலயே என்று யூகிக்கும் வகையில் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது, குணசேகரன் “நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீர்களோ செய்யுங்க, ஆனால் என் பேர் வர கூடாது” என வார்னிங் கொடுக்கிறார்.
பிறகு ஞானம் ஒரு வேலைவிஷயமாக ஒருவரை பார்க்க வந்திருக்க அது திடீர் பணக்காரனாக மாறிய கரிகாலன் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். வெளியே கரிகாலன் உண்மையாகவே அதிர்ஷ்டக்காரன்தான்,ஒரே மாதத்தில் பணக்காரனாகிட்டான் என பேசுகின்றனர்.
அதே போல் பெண்கள் 4 பேரும் ஒருவரை சந்தித்து பேசுகின்றனர். அப்போது ஜனனி நாளைக்கு ஒருவரோடு உங்களை வந்து சந்திக்கிறோம் என்று சொல்ல அந்த பெண் யாரு குணசேகரன் சார் தானே என் கேட்டு ஷாக் கொடுக்கிறார். மேலும் அவர் கையெழுத்து போட்டா எல்லாமே முடிந்திடுமே என சொல்கிறார்.
இதைக்கேட்டு பெண்கள் எல்லோரும் எழுந்து வெளியே வருகின்றனர். அடுத்து செய்ய போவது என்ன என்று யோசிக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.