Home Serial குளிர் காயும் Gunasekaran… கதிரால் கடுப்பான நந்தினி… ‘Ethirneechal’ இன்றைய எபிசோட்!

குளிர் காயும் Gunasekaran… கதிரால் கடுப்பான நந்தினி… ‘Ethirneechal’ இன்றைய எபிசோட்!

Sun Tv'யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி  வரும் 'Ethirneechal' தொடரின் இன்றைய (04-05-2024) எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே! 

by Naveen Dhayalan

சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி  வரும் ‘Ethirneechal’ தொடரின் இன்றைய (04-05-2024) எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே! 

எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஞானம் ஏமாறப்போகிறோம் என்று தெரியாமல் வீட்டிலிருந்து கடையை திறக்கும் விஷயத்தை பற்றி சொல்ல ஜனனியும் நாம் எடுத்து வச்ச முதல் படியில அவருக்கு வெற்றி கிடைச்சிருக்கு சந்தோஷம் தானே என்று சொல்லியிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நடக்கப் போவது என்ன என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. 

Ethirneechal

இன்றைய எபிசோடில் ரேணுகா போனில் கடை திறப்பு விழா குறித்த போஸ்டரை பார்த்து விட்டு ”இப்போ நடிகையை வச்சு கடை திறக்கிறது எல்லாம் ரொம்ப அவசியமா… வயசுக்கு வந்த புள்ளைய வச்சுக்கிட்டு எவ கூடயோ ஜோடி சேர்ந்து போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்க” என்று சண்டையிடுகிறார். இதனால் ரேணுகாவுக்கும் ஞானத்துக்கும் இடையே வாக்குவாதம் உருவாக அதை பார்த்து குளிர் காய்கிறார் குணசேகரன்.  

அதன் பிறகு நந்தினி அவர் முகத்துல மெச்சூரிட்டி வந்தா மாதிரி ஒரு தேஜஸ் தெரியுதுல கண்டிப்பாக ஜெயிச்சிடுவாரு என்று சொல்ல ரேணுகா அதற்கும் பதிலடி கொடுத்து ஆஃப் செய்கிறார். 

நந்தினி கொடுத்த மிரட்டல்… ஷாக் கொடுத்த சீஃப் கெஸ்ட்… ‘Ethirneechal’ இன்றைய எபிசோட் !

அடுத்ததாக கதிர் அம்மாகிட்டயும் அண்ணாகிட்டயும் கடை திறப்புவிழா பற்றி சொல்ல வேண்டாமா என்று கேட்க எதுக்கு சொல்லணும் என்று நந்தினி கேள்வி கேட்க கதிர் அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.