சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் Ethirneechal. இந்த சீரியலில் இன்று(-07-05-2024) நடக்கப்போவது என்ன?
நேற்றைய எபிசோட்டில் ஞானம் பிசினஸ் தொடங்கும் இடத்திற்கு அனைவரும் வந்து சேர கரிகாலன் வந்து இறங்கியதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடையவதோடு முடிந்திருந்தது. அதாவது ஞானத்தின் பிசினஸ் விஷயத்தில் பெண்கள் குழப்பத்தில் இருக்க ஈஸ்வரி ”ஞானத்தோடு ஆசைப்படி பிசினஸ் தொடங்கட்டும். கொஞ்ச நாள் போனதும் நாம கண்ட்ரோல் எடுத்து நடத்தலாம்” என்று ஐடியா சொல்கிறார்.
![நந்தினி கொடுத்த மிரட்டல்… ஷாக் கொடுத்த சீஃப் கெஸ்ட்... 'Ethirneechal' இன்றைய எபிசோட் ! 2 WhatsApp Image 2024 05 07 at 8.05.45 AM](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-07-at-8.05.45-AM-1024x711.jpeg)
ஆனால், நந்தினியோ கரிகாலனிடம் ”ஒழுங்கு மரியாதையா இது எல்லாம் எடுத்துக்கிட்டு பணத்தை கொடு… இல்ல கண்ணு காது மூக்கு எல்லாம் நோண்டிடுவேன்” என்று கரிகாலனை பார்த்து எச்சரிக்கை கொடுக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் கார் ஒன்று வந்து நிற்க கரிகாலன் கரிகாலன் வாங்க வாங்க சீஃப் கெஸ்ட் வந்துட்டாரு என ஓடுகிறார். பெண்களும் யார் அந்த சீஃப் கெஸ்ட் என்று பார்க்க வெளியே வர கரிகாலன் காரை திறந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இதை பார்த்த ரசிகர்கள் அப்போ அந்த சீப் கெஸ்ட் குணசேகரன் தான் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.