சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் Ethirneechal. இந்த சீரியலின் இன்றைய ஹைலைட்ஸ் இங்கே!
கரிகாலனை நம்பி ஞானம் ஏமாற ரேணுகா புருஷன் என்று கூட பார்க்காமல் அறைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ஞானம் ”அண்ணன் கிட்ட வாழ்ந்து காட்டுறேனு சவால் விட்டுட்டு வந்தேன்… இப்போ ஏமாந்து நிக்கிறேன்” என வருத்தப்பட ஆறுதல் சொல்லும் கதிர் அந்த கரிகாலன் கையில் கிடைக்கட்டும் என ஆவேசப்படுகிறான்.
அடுத்ததாக விசாலாட்சி ”இன்னும் ஏன்டி இங்க இருக்கீங்க” என கேட்க நந்தினி ”உங்க புள்ளைதான் ஜெயிச்சு காட்டிட்டு வெளியே போக சொல்லி இருக்காரு” என்று சொல்ல அவன் சொன்னா உங்களுக்கு புத்தி எங்க போச்சு என கேட்கிறார்.
இதனால் கோபமாக எழுந்து கொள்ளும் ஈஸ்வரி உங்க கிட்ட பேசணும் என குணசேகரனிடம் சொல்ல அவர் நக்கலாக பேச ஈஸ்வரி எதையோ சொல்லி வாயடைக்க வைக்கிறார்.
குணசேகரனுக்கு ஆப்பு, தர்ஷனுக்கு விழுந்த அடி, கதிருக்கு ஷாக்! ‘Ethirneechal’ எபிசோட்!
இதனால் இன்றைய எபிசோட் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.