சன் டிவியில் ஒளிபரப்பான பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘மெட்டி ஒலி’. இந்த சீரியலை இயக்கியதுடன், ‘கோபி’ என்ற ரோலில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியவர் திருமுருகன். இவர் வெள்ளித்திரையிலும் பரத்தின் ‘எம் மகன்’ மற்றும் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ ஆகிய படங்களை இயக்கினார்.
‘மெட்டி ஒலி’ சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ‘நாதஸ்வரம், தேனிலவு, குலதெய்வம், கல்யாண வீடு‘ ஆகிய சீரியல்களை இயக்கி, நடித்தார் திருமுருகன். இதில் ‘கல்யாண வீடு’ சீரியல் 2018-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.
திருமுருகன் இயக்கப்போகும் புதிய சீரியலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 14-ஆம் தேதி) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது புதிய படைப்பு வரப்போகிறது என்று திருமுருகனின் யூடியூப் பக்கமான ‘திரு டிவி’யில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.