சின்னத்திரைக்குள் மீண்டும் ஒரு திருமணம் அரங்கேறியிருக்கிறது. ‘நாதஸ்வரம்’ சீரியலில் கோபி கதபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் புகழ்பெற்ற ஸ்ரித்திகா, ‘மகராசி’ தொடரில் தன்னுடன் நடித்த எஸ்எஸ்ஆர் ஆர்யனை மணந்திருக்கிறார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் திருமணத்தை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்திருக்கும் ஸ்ரித்திகா தனது முன்னாள் கணவரான சனீஷின் பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இன்னும் நீக்கமுடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு இறுதியில் ஸ்ரித்திகாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த சனீஷுக்கும் திருமணம் நடந்திருந்தது. இருவரும் முறைப்படி தற்போது பிரிந்துவிட்ட நிலையில்தான் எஸ்எஸ்ஆர் ஆர்யனை மணந்திருக்கிறார் ஸ்ரித்திகா.
இன்னொருபக்கம் எஸ்எஸ்ஆர் ஆர்யன் நிவேதிதா என்னும் சீரியலை நடிகையை முன்னர் திருமணம் செய்திருந்தார். ‘வாணி ராணி’, ‘கல்யாண பரிசு’, ‘திருமகள்’ போன்ற சீரியல்களில் நடித்தவர் நிவேதிதா. ஆர்யனும், நிவேதிதாவுமே சில மாதங்களுக்கு முன்னர் முறைப்படி பிரிந்துவிட்டனர்.
இந்த சூழலில்தான் ஸ்ரித்திகாவும், ஆர்யனும் பதிவுத்திருமணம் செய்துகொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.