கார் வாங்கிய பிறகு முத்து ஏரியா தலைவரை ஒரு பாரில் டிராப் செய்கிறான். அவர்கள் முத்துவையும் குடிக்க கூப்பிட முத்து ”டியூட்டி டைம்ல குடிக்க மாட்டேன்” என்று உறுதியாக சொல்லிவிட, ”சரி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நாங்க போய் குடிச்சிட்டு வரோம்… எங்களை நுங்கம்பாக்கத்தில் டிராப் பண்ணனும்” என்று சொல்லி உள்ள செல்கின்றனர். பிறகு முத்து பாட்டு போட அதுவும் சரக்கு குறித்த பாட்டாக இருக்க பாட்டை ஆஃப் செய்து விடுகிறான்.
![குடிகாரனாக முத்துவை சித்தரிக்கும் சிட்டி... அதிர்ச்சிக்குள்ளாகும் மீனா... 'Siragadikka Aasai' இன்றைய எபிசோட்! 2 Siragadikka Aasai](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/Untitled-design-139-1024x683.png)
மறுபக்கம் முத்துவின் தம்பி ரவி வேலை செய்யும் ரெஸ்டாரண்டுக்கு வரும் அவன் மனைவி ஸ்ருதி ”வா நாம உடனே குழந்தை பெத்துக்கலாம்… எனக்கு இப்பவே குழந்தை வேண்டும்” என்று அடம் பிடிக்கிறாள். எல்லோரும் ஸ்ருதியை விசித்திரமாக பார்க்க ரவி தனியாக கூட்டிச்சென்று என்ன லூசு மாதிரி பேசிட்டு இருக்க என்று கேட்க ஸ்ருதி ”ஆமா… இன்னைக்கு நான் ஒரு மூவிக்கு டப்பிங் பேச போயிருந்தேன்… எனக்கு அதை பார்த்ததும் குழந்தை பெத்துக்கணும்னு ஆசை வந்துடுச்சு… வா அதுக்கான ப்ராசஸை ஸ்டார்ட் பண்ணலாம்” என்று கூப்பிடுகிறாள். இப்படியே இவர்கள் இருவரும் பேசி பேசி குழந்தையை ஸ்கூலில் சேர்ப்பது வரை சென்று விடுகின்றனர். ரவியை ரெஸ்டாரன்ட் உரிமையாளர் கூப்பிட்டு ரவி ”உனக்கு குழந்தை இருக்கா ஸ்கூல்ல சேர்க்கிறதெல்லாம் பத்தி பேசுறீங்க” என்று கேட்க ஸ்ருதி ”இல்ல இப்பதான் பெத்துக்க போறோம் அதுக்கு தான் ரவியை கூட்டிட்டு போக வந்தேன்… பர்மிஷன் கொடுங்க” என்கிறாள்.
ரவி ரெஸ்டாரண்ட் உரிமையாளரிடம் சாரி சொல்லி ஸ்ருதியை வீட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு ஓனர் ”நீ இப்பதான் கரியரை ஸ்டார்ட் பண்ணி இருக்க… இந்த நேரத்துல குழந்தை எல்லாம் தேவையான்னு யோசிச்சி முடிவு பண்ணு” என்று சொல்கிறார்.
இதற்கிடையே முத்துவுக்கு மகாபலிபுரம் சவாரி குறித்து ஒரு போன் கால் வருகிறது. முத்து 20 நிமிஷத்துல வந்துடுறேன் என்று சொல்லி தலைவரிடம் விஷயத்தை சொல்லி விட்டு கிளம்புவதற்காக பாருக்குள் வருகிறான். அப்போது முத்துவின் நண்பர் மட்டுமே சரக்கு அடித்துக் கொண்டிருக்க முத்து தலைவருக்காக காத்திருக்க தலைவர் வந்ததும் அவருக்கு சரக்கு பாட்டிலை திறந்து கொடுக்க இதையெல்லாம் சிட்டி வீடியோவாக எடுக்கிறான்.
நடப்பது எல்லாம் முத்துவுக்கு எதிராகவே நடக்க முத்துவை ஒரு குடிகாரன் போல சித்தரிக்கிறான் சிட்டி. சமூக வலைதளங்களில் இந்த மாதிரி டிரைவரை நம்பி கார்ல ஏறாதீங்க என்று வீடியோவை பரப்ப அதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து முத்துவை திட்டுகின்றனர்.
அடுத்ததாக அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த மீனா அவருக்கு டீ போட்டுக் கொடுக்க சத்யாவும் வீட்டுக்கு வந்து விட அவரது கையில் புதியதாக பெரிய போன் இருப்பதை பார்த்து மீனா அந்த சிட்டி கூட சேராதன்னு சொன்னா கேக்குறியா நீ என்று எல்லோரும் திட்டிக் கொண்டிருக்க ”அப்போ நான் இந்த குடிகாரன் கூட சேரவா” என்று முத்து குறித்து பரவும் வீடியோவை காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.