விஜய் டிவியில் இரவு 9 ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘Siragadikka Aasai’. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்(08-05-2024) ஹைலைட்ஸ் இங்கே!
வீட்டுக்கு வந்த பார்வதி விஜயாவிடம் பேச அவர் வயிறு எரியுதுனு சொல்ல தண்ணி குடிச்சா சரியாகிடும் என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயாவுக்கு வயிற்றைக் கலக்க ”இரு இரு பார்வதி” என்று பாத்ரூமுக்குள் ஓடுகிறார்.
இப்படியே பத்து பதினைந்து தடவை பாத்ரூமுக்குள் ஓடும் விஜயா நடக்கக்கூட முடியாமல் பெட்டில் மயங்கி சரிய, அண்ணாமலை ரோகினி மனோஜ் பார்வதி என எல்லோரும் பதறுகின்றனர். இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் முத்து அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று தொட்டுப் பார்க்க காய்ச்சலாக இருப்பதை பார்த்து மனோஜ் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம் என்று சொல்கிறார். அதெல்லாம் வேண்டாம் இப்ப இருக்குற நிலைமைல அவங்களால நடக்கக்கூட முடியாது என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் கிளினிக்கில் இருந்து டாக்டரை கூட்டி வருகிறார்.
மறுபக்கம் மீனா மருந்து வாங்கி கொடுத்த அக்காவை பார்த்து நடந்த விஷயத்தை சொல்ல அவர் மொத்தமாக குடிச்சிட்டாங்க… வயித்தை கலக்கும் வாந்தி வரும், உடம்பு டயட் ஆகிடும். சத்தானதா கொடுத்து உடம்ப தேத்திக்க வேண்டியது தான் என்று சொல்கிறார். ”உயிருக்கலாம் எந்த பிரச்சினையும் வராது… பயப்படாம போ மீனா” என அனுப்பி வைக்கிறார். இங்கே விஜயாவை பரிசோதனை செய்த டாக்டர் சாப்பிட்டது ஏதாவது ஒத்துக்காம போயிருக்கும் இரண்டு நாளைக்கு கஞ்சி குடிங்க சரியா போயிடும் என்று சொல்கிறார்.
Also Read: மயங்கி விழுந்த விஜயா, அவமானப்படும் முத்து… Siragadikka Aasai இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ்!
அதைத்தொடர்ந்து மீனா வீட்டுக்கு வர முத்து எங்க போயிருந்த? அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதும் மீனா அத்தைக்கு என்னாச்சு என்று ரூமுக்குள் ஓடி வருகிறார். மீனா அத்தை ஆரஞ்சு ஜூஸ் குடிச்சாங்க என்று சொல்கிறார். ஜூஸ் குடிச்சா உடம்புக்கு நல்லது தானே என்று பார்வதி சொல்ல, அதானே ஜூஸ் குடிச்சா எப்படி ஃபுட் பாய்ஸனாகும் என்று கேட்கிறார். ரோகினி பழம் ஏதாவது கெட்டுப் போகி இருந்ததா என்று கேட்க மீனா அதெல்லாம் இல்லை என்று சொல்கிறார்.
அது இவருக்காக போட்டு வச்ச ஜூஸ், இவரு குடியை விடனும் என மருந்து கலக்கி இருந்தேன் என்று மீனா சொல்ல விஜயா மருந்தா என அதிர்ச்சி அடைகிறார். என்னை கொல்றதுக்காக இப்படி பண்ணி இருக்கா என்று ஆவேசப்படுகிறார்.
மனோஜ் இவன் அதையே சரக்குல கலந்து தான் குடிப்பான் இவன் எப்பயும் குடியை விடமாட்டான் என்று பேச முத்து எதுவும் பேச முடியாமல் கலங்கி நிற்கிறான். ஆளாளுக்கு மீனாவை பிடித்து திட்ட அண்ணாமலை ”அவ புருஷனை சரி செய்யணும்றதுக்காக முயற்சி பண்ணி இருக்கா… அவ மேல எந்த தப்பும் கிடையாது… உங்க அம்மா எதுக்கு மத்தவங்களுக்கு போட்டு வச்ச ஜூஸை எடுத்து குடிக்கணும்” என்று சொல்கிறார். அவன் பண்ண வேலையால அதிகமா அவமானப்பட்டு நின்னது மீனா தானே இப்பயாவது மத்தவங்களுக்கு புத்தி வரட்டும் என்று சொல்கிறார்.
பிறகு முத்து மொட்டை மாடியில் உட்கார்ந்து கலங்கிக் கொண்டிருக்க அங்கு வந்த மீனாவிடம் நான் குடிக்கல என்று சொல்ல மீனா நம்பாமல் இருக்க முத்து அவள் மடிமீது படுத்து ”நீ வாங்கி கொடுத்த கார்… அதை நான் குடிச்சிட்டு ஓட்டுவேனா? சத்தியமா நான் குடிக்கல” என்று திரும்பத் திரும்ப சொல்கிறான்.
அதன் பிறகு மீனா விஜயாவுக்கு கஞ்சி கொண்டு வந்து கொடுக்க உன்ன நம்பி இந்த வீட்ல நான் பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன் நீ அதுல ஏதாவது கலந்திருந்தாலும் கலந்திருப்ப என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் மீனா அதை குடித்து அதுல எதுவும் கலக்கல, கஞ்சி கிச்சன்ல இருக்கு உங்களுக்கு வேணும்னா குடிங்க இதுக்கு அப்புறம் உங்களோட விருப்பம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விடுகிறார்.
அடுத்ததாக ஸ்டேஷனுக்கு வந்த முத்து காரை கேட்க அங்கிருந்த கான்ஸ்டபில்கள் ஒரே நாள்ல ஊர் முழுக்க பேசுற மாதிரி பாப்புலர் ஆகிட்ட என்று கலாய்க்கின்றனர். கோடி கோடியாய் கொட்டி படம் எடுக்கிறானுங்க அதெல்லாம் ஓடமாட்டேங்குது… அஞ்சு நிமிஷம் வீடியோ என்னம்மா ஓடுது என கிண்டல் அடிக்க முத்து நான் குடிக்கல சார் என்று சொல்கிறார். இப்ப குடிக்கலனு தான் நல்லாவே தெரியுது என்று போலீஸ்காரர்கள் கேட்க நேற்றே நான் குடிக்கல சார் என்று சொல்கிறார். முத்துவை பேப்பர் வாங்கிட்டு வா, எல்லாருக்கும் டீ வாங்கிட்டு வா மசால் வடை வாங்கிட்டு வா என்று வேலை செய்ய வைத்து அலைகழிக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது!