Home Serial முத்து குடிக்கவில்லை…முத்து – மீனாவை வீட்டுக்குள் விடவில்லை… ‘Siragadikka Aasai’ இன்றைய ஸ்பெஷல்!

முத்து குடிக்கவில்லை…முத்து – மீனாவை வீட்டுக்குள் விடவில்லை… ‘Siragadikka Aasai’ இன்றைய ஸ்பெஷல்!

தமிழ் சின்னத்திரையின் நம்பர் ஒன் சீரியலான விஜய் டிவியின் 'Siragadikka Aasai' இன்றைய எபிசோட் ஹலைட்ஸ்!

by Naveen Dhayalan

தமிழ் சின்னத்திரையின் நம்பர் ஒன் சீரியலான விஜய் டிவியின் ‘Siragadikka Aasai’ இன்றைய எபிசோட் ஹலைட்ஸ்!

மே 10-ம் தேதியான இன்றைய எபிசோடில் முத்து மீனா ரவி ஆகியோர் ஸ்டேஷனுக்கு வர போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ள வாங்க என்று கூப்பிட்டு உட்கார வைத்து முத்துவுக்கு மரியாதை கொடுத்து மன்னிப்பு கேட்கிறார். மீனாவின் துணிச்சலான செயலை பாராட்டி நீ சொன்ன மாதிரி உனக்கு கிடைத்த பொண்டாட்டி யாருக்கும் கிடைக்க மாட்டாங்க என்று பாராட்டுகிறார். 

Siragadikka Asai

முத்து தன்னுடைய காரை கேட்க ”எடுத்துக்கப்பா… இந்த விஷயத்தை இதுக்கு மேல பெருசாக்க வேண்டாம்” என்று சொன்னதோடு இன்ஸ்பெக்டர் ”அவனை கூட்டிட்டு வாங்க” என்று சொல்ல போலீஸ் சிட்டியை கூட்டி வந்து நிறுத்துகின்றனர். ”இவன் தான் அந்த வீடியோவை எடுத்தது. இவன்கிட்ட இருந்து ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடா வாங்கி தரேன்” என்று சொல்ல முத்து ”இவனே கொள்ளை அடிக்கிறவன்… இவன் பணம் எனக்கு எதுக்கு? இவன மாதிரி ஆளுங்களுக்கு சரியான தண்டனை கொடுங்க சார்” என்று சொல்ல இன்ஸ்பெக்டர் எஃப் ஐ ஆர் போட சொல்லி உத்தரவு கொடுக்கிறார். 

Siragadikka Asai

அதன் பிறகு கார் சாவியை வாங்கிக் கொண்டு இவர்கள் கிளம்பும்போது மீனா ”இவன் மட்டும் வெளியே இருந்திருந்தா உங்க கையால நாலு அடி அடிக்க சொல்லி இருப்பேன்” என்று சொல்ல ”அவ்வளவு தானே” என்று முத்து சிட்டியை பிடித்து அறைய போலீஸ் முத்துவை தடுத்து அனுப்பி வைக்கின்றனர். 

மறுபக்கம் அண்ணாமலை எல்லோரையும் கூப்பிட்டு டிவியில் வீடியோவை போட்டு முத்து தப்பே பண்ணல என்று நிரூபிக்கிறார். அப்பவும் மனோஜ் மற்றும் விஜயா முத்துவைப் பற்றி தப்பாக பேச அண்ணாமலை அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார். 

பிறகு விஜயாவை ஆரத்தி கரைத்து எடுத்து வர சொல்ல அவர் அதெல்லாம் என்னால பண்ண முடியாது என்று சொல்ல உன்னை பண்ணுவியா மாட்டியான்னு கேட்கல போய் எடுத்துட்டு வா என்று மிரட்ட விஜயா ஆரத்தி கரைக்க சென்று விடுகிறார். வீட்டுக்கு வரும் முத்து மீனாவை வெளியே நிற்க வைக்க ரவி அவன் தப்பே பண்ணல… இன்னும் அவன் மேல உங்களுக்கு கோபம் வரலையா என்று கேட்க விஜயா ஆரத்தி தட்டை எடுத்து வந்ததும் ரோகிணி மற்றும் ஸ்ருதி என இரண்டு பேரையும் கூப்பிட்டு மூணு பேரும் சேர்ந்து எடுங்க என்று ஆரத்தி எடுக்க வைக்கிறார்.  

அடுத்து முத்துவைக் கட்டியணைத்து அண்ணாமலை ”என்னை மன்னிச்சிடுடா முத்து” என மன்னிப்பு கேட்க முத்து ”நீ எதுக்குப்பா மன்னிப்பு கேக்குற…  ஆனா என்ன ஆனாலும் நீ மட்டும் என்கிட்ட பேசாம இருக்காத” எனச்சொல்லி கண்கலங்குகிறான். மீனாவும் நீயும் இதே மாதிரி எப்பவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அண்ணாமலை அறிவுரை சொல்ல மீனா விஜயாவிடம் சென்று என் புருஷன் குடிக்கவே இல்ல இப்ப என்னை யாரும் குடிகாரன் பொண்டாட்டின்னு சொல்ல மாட்டாங்க என்று பதிலடி கொடுக்கிறாள். 

மீனாவை சீண்டி அவமானப்பட்ட ரோகினி… ‘Siragadikka Aasai’ இன்றைய எபிசோட்!

ரோகிணிக்கும் எது பேசுறதா இருந்தாலும் யோசிச்சிப் பேசுங்க என்று பதிலடி கொடுக்க விஜயா ”அவன் அன்னைக்கு குடிக்கல அவ்வளவு தானே… அவன் எப்பயுமே குடிக்காம இல்லையே… அவன் குடிகாரன்தான்” என்று சொல்லி விட்டு ரோகிணியை உள்ளே அழைத்து செல்கிறார். 

மறுபக்கம் சத்யா சிட்டியை பார்க்க சிட்டி உனக்கு அட்வைஸ் பண்ற உன் மாமாவே குடிச்சுட்டு சுத்திட்டு இருக்காருன்னு உன்கிட்ட காட்ட தான் வீடியோ எடுத்தேன். அத நான் யாருக்கும் அனுப்பல நீ என்ன நம்புற தானே என்று சத்யாவிடம் நல்லவன் வேஷம் போட்டு நம்ப வைக்கிறான். நான் வரவரைக்கும் என் இடத்திலிருந்து எல்லாத்தையும் நீதான் பார்த்துக்கணும் என்று பொறுப்பை கொடுத்து சத்யாவை கவிழ்க்கிறான்.  இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.