தமிழ்நாட்டின் நம்பர் 1 சீரியலாக இருந்துவந்த ‘Ethirneechal’ தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் இன்று நடைபெறுவது சின்னத்திரையில் பலருக்கும் அதிர்ச்சி செய்தியாக மாறியிருக்கிறது.
![திடீரென நிறுத்தப்படும் ‘Ethirneechal'... இன்று ஃபேர்வெல் ஷூட்டிங்! 2 Ethirneechal](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/Ethirneechal-1024x683.png)
பிரபல சீரியல் இயக்குநர் மற்றும் கதாசிரியரான திருச்செல்வம் நீண்ட கால இடைவெளிக்குப்பிறகு சன் டிவியில் தயாரிப்பாளராகவும் உருமாறி ஆரம்பித்த சீரியல் ‘எதிர்நீச்சல்’. நான்கு மருமகள்கள் ஒரு ஆணாதிக்க வீட்டுக்குள் வந்து மாட்டிகொள்வதுதான் இந்த சீரியலின் ஒன்லைன். ஆணாதிக்கவாதியாக நடிகர் மாரிமுத்து நடிக்க மருமகள்களாக கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா ஆகியோர் நடித்தனர். ‘’எல்லார் வீட்டிலும் இப்படித்தான் ஒரு ஆணாதிக்கவாதி இருக்கான்’’ என பேச்சு ஆரம்பித்து ‘எதிர்நீச்சல்’ சீரியலின் புகழ் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பரவ, எல்லாராலும் கொண்டாடப்படும் சீரியலாக மாறியது. டிஆர்பி-யைப் பொருத்தவரை நீண்ட வருடங்களுக்குப்பிறகு 12 டிஆர்பியைத்தொட்ட அதாவது கிட்டத்தட்ட 1.2 கோடி பேர் பார்க்கும் சீரியலாக இந்த சீரியல் உச்சம் தொட்டது.
எல்லாம் ஏறுமுகமாக இருந்த இந்த சீரியலில், திடீரென இந்த சீரியலுக்கான டப்பிங்கில் இருக்கும்போதே நடிகர் மாரிமுத்துவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைய, அவருக்கு பதிலாக நடிகரும், எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், வேலராமூர்த்தி அந்த கதாபாத்திரத்துக்கு செட் ஆகவில்லை என்பதோடு, இயக்குநர் திருச்செல்வத்துக்கும் அவருக்கும் தொடர்ந்து உரசலாக இருக்க, டிஆர்பியும் கீழே இறங்கிக்கொண்டே போக சீரியலுக்கு எண்ட்கார்டு போட்டுவிட்டார்கள்.
இன்றுதான் ‘எதிர்நீச்சல்’ தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. ஜூன் 8-ம் தேதி எதிர்நீச்சலின் கடைசி எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. ஜூன் 10 முதல் கேப்ரியல்லா, ராகுல் ரவி நடிக்கும் ‘மருமகள்’ தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.