சன் டிவியின் ப்ரைம் டைம் தொடர்களில் இன்று முதல் மூன்று புதிய மாற்றங்கள் நடக்கிறது. இதுவரை சன் டிவியில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த ‘Anbe Vaa’ நெடுந்தொடர் நேற்றோடு முடிவடைந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘அன்பே வா’ தொடரில் முதலில் ஹீரோயினாக நடித்தவர் டெல்னா டேவிஸ். இதன்பிறகு ஹீரோயின் மாறிவிட்ட நிலையில் 1102 எபிசோடுகள், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஒளிப்பரப்பான ‘அன்பே வா’ தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது.
‘அன்பே வா’ முடிவடைந்த அதே நேரத்தில் இன்று முதல் இரவு 9.30 மணிக்கு ‘மல்லி’ என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.மல்லி தொடரில் நிகிதா ஹீரோயினாகவும், ஜீ தமிழின் ‘பேரன்பு’ தொடரில் நடித்த விமல் ஹீரோவாகவும் நடிக்கயிருக்கிறார்கள். இந்ததொடர் ஒளிபரப்பாக இருப்பதால் இதுவரை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘இனியா’ இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
10 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த ‘மிஸ்டர் மனைவி’ இன்று முதல் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. முதலில் 8.30 மணிக்கு ஒளிப்பராகத்தொடங்கிய இத்தொடரில் ‘செம்பருத்தி’ தொடர் மூலம் புகழ்பெற்ற ஷபானா நடித்தார். ஆனால்,அவர் இப்போது கர்ப்பமாகியிருப்பதால் அவருக்கு பதிலாக ஸ்டார் மா டிவியில் நடித்துவரும் டெபாஞ்சி மொடக் புதிய அஞ்சலியாக நடிக்கயிருக்கிறார். ஷபானாவின் கணவர் ஆர்யன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலின் ஹோரோவாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயின் மாறுவதால் ‘மிஸ்டர் மனைவி’ மதியத்துக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவு 10.30 மணிக்குத் தொடரை தள்ளியிருக்கிறது சன் டிவி.