Home Serial ‘மல்லி’, ‘புன்னகைப்பூவே’… எதற்காக இவ்வளவு புது சீரியல்களை கொண்டுவருகிறது Sun Tv?!

‘மல்லி’, ‘புன்னகைப்பூவே’… எதற்காக இவ்வளவு புது சீரியல்களை கொண்டுவருகிறது Sun Tv?!

Tamil serial | Sun Tv Serail தமிழ்நாட்டில் தொலைக்காட்சி சேனல்களைப் பொருத்தவரை Sun Tv, Vijay TV, ZEE Tamil என மூன்று சேனல்களுக்கு இடையேதான் பெரிய போட்டி நிலவிவருகிறது.

by Santhiya Lakshmi

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி சேனல்களைப் பொருத்தவரை Sun TV, Vijay Tv, Zee Tamil என மூன்று சேனல்களுக்கு இடையேதான் பெரிய போட்டி நிலவிவருகிறது. இதில் சன் டிவிதான் நம்பர் 1 சேனலாக இருந்தாலும், சீரியல்களைப் பொருத்தவரை விஜய் டிவிதான் இப்போது நம்பர் ஒன். 

SunTv New Tamil Serial

தமிழ்நாட்டில் அதிகமாக வணிகமாவது தொலைக்காட்சி பிசினஸ்தான். பெரிய தொழில்நிறுவனங்கள் விளம்பரங்களாக கோடிகோடியாக கொட்டிக்கொடுப்பது டிவி நிறுவனங்களுக்குத்தான். காரணம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 100 சதவிகித வீடுகளில் தொலைக்காட்சியின் தாக்கம் இருப்பதுதான். அதனால் தொலைக்காட்சி மார்க்கெட் என்பது கடுமையானப் போட்டி நிறைந்தததாக இருக்கிறது. தொலைக்காட்சியில் ரசிகர்கள் சீரியல்களைத்தான் அதிகம் பார்க்கிறார்கள் என்பதால், எல்லா சேனல்களும் போட்டிபோட்டிக்கொண்டு புதிய மெகா சீரியல்களை களமிறக்கிவருகின்றன.

SunTv New Tamil Serial

சன் டிவியில் தற்போது எதிர் நீச்சல், கயல், சுந்தரி ஆகிய மூன்று சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மறுபக்கம் ‘வானத்தைப் போல’, ‘இனியா’, ‘மிஸ்டர் மனைவி’ போன்ற சீரியல்களின் டிஆர்பி குறைந்துகொண்டே வருகிறது. அதனால் இந்த சீரியல்களை மாற்றும் முடிவை எடுத்திருக்கிறது சன் டிவி. ஏற்கெனவே ‘மிஸ்டர் மனைவி’ பிரைம் டைமில் இருந்து மதியத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்போது 9.30மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘இனியா’ தொடரையும் தூக்கிவிட்டு அங்கே ‘மல்லி’ என்கிற புதிய தொடரை ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி. ‘மல்லி’ தொடரில் நிகிதா கதாநாயகியாவும், ஜீ தமிழின் ‘பேரன்பு’ சீரியலில் நடித்த விமல் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். 

இதற்கு அடுத்தபடியாக நேற்று இரவு ‘புன்னகைப் பூவே’ என்கிற புதிய சீரியலுக்கான ப்ரோமோவை வெளியிட்டிருக்கிறது சன் டிவி. இதில் சைத்ரா சக்காரி என்பவர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். 

SunTv New Tamil Serial

இவர் ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகும் சீரியலின் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. ‘புன்னகைப் பூவே’ தொடரை மதிய நேரத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறது சன்டிவி.

இதற்கு அடுத்தபடியாக சன்டிவியில் ‘மெட்டி ஒலி’, ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த திருமுருகன் மீண்டும் சன் டிவிக்காக ஒரு சீரியல் இயக்கி தயாரிக்கிறார். அந்த சீரியலின் ப்ரோமோவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏன் இவ்வளவு சீரியல்கள்?!

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி சேனல்களைப் பொருத்தவரை சன்டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என மூன்று சேனல்களுக்கு இடையேதான் பெரிய போட்டி நிலவிவருகிறது. இதில் சன் டிவிதான் நம்பர் 1 சேனலாக இருந்தாலும், சீரியல்களைப் பொருத்தவரை விஜய் டிவிதான் இப்போது நம்பர் ஒன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’, ‘சிறகடிக்க ஆசை’ போன்ற தொடர்கள்தான் தொடர்ந்து அதிகப்படியான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சன், விஜய் தொலைக்காட்சி சீரியல்களை முந்தி நம்பர் 1 இடம் பிடித்தது. அதனால் எந்த நேரமும் இந்த மூன்று சேனல்களும் தங்களுக்குள் போட்டா போட்டுக்கொண்டிருக்கின்றன. போட்டி கடுமையாக இருப்பதால் தன்னுடைய இடத்தை இழந்துவிடக்கூடாது என சன் டிவி புத்தம் புது சீரியல்களை அறிமுகப்படுத்திகொண்டே இருக்கிறது.

சன் டிவியின் புதிய தொடர்களால் சேனல் போட்டி இன்னும் கடுமையாக இருக்கிறது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.