Home Serial ‘’ ‘எதிர் நீச்சல்’ சீரியலில் நடித்தது எனக்கு பெரிய அவமானம்… வேல ராமமூர்த்தி பேச்சு… காரணம் என்ன? 

‘’ ‘எதிர் நீச்சல்’ சீரியலில் நடித்தது எனக்கு பெரிய அவமானம்… வேல ராமமூர்த்தி பேச்சு… காரணம் என்ன? 

by Santhiya Lakshmi

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற பிரபலமான சீரியல் ‘எதிர் நீச்சல்’. திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் ஆண் ஆதிக்கத்தால் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பெண்கள் எப்படி மீண்டும் வெளியே வருகிறார்கள் என்பது இந்த சீரியலின் கதைக்களம். 

Untitled design 62

ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தவர் மாரிமுத்து. இவருடைய ‘’இந்தாமா ஏய்’’ போன்ற டயலாக்குகள் இன்று வரை மறக்க முடியாதவையாக இருந்து வருகிறது. 

மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு ஆதி குணசேகரன் ஆக நடிக்க தொடங்கினார் வேல ராம மூர்த்தி. திறமையான நடிகராக இருந்தாலும் இவரால் மாரிமுத்துவின் இடத்தை நிரப்ப முடியவில்லை. இவரது என்ட்ரிக்கு பிறகு சீரியல் ரேட்டிங்கும் குறைய தொடங்கியது.

இப்படியான நிலையில் கடந்த வாரம் இந்த சீரியல் மொத்தமாக முடிவுக்கு வந்தது. சீரியல் முடிவடைந்த பிறகு வேலராமமூர்த்தி அளித்த பேட்டி ஒன்றில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்தது தனக்கு பெரிய அவமானம் என தெரிவித்துள்ளார். 

நல்ல கதையாக இருந்தாலும் இந்த சீரியலில் கடைசிவரை தன்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை என கவலையாக தெரிவித்துள்ளார். நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்ட வேலராமமூர்த்தி ‘மதயானை கூட்டம்’ என்ற படத்தின் மூலம் தான் பேசப்படும் நடிகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.