விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் Baakiyalakshmi. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே!
ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து சுடு தண்ணீர் கேட்க டல்லாக இருக்கும் அவரை பார்த்ததும் பாக்யா நைட்டு சரியா தூங்கலையா என்று கேட்க ஈஸ்வரி அதெல்லாம் நல்லாதான் தூங்குனேன் என சொல்கிறார். செல்வி கொள்ளுப்பாட்டியாகி இப்ப திரும்பவும் பாட்டியாகப்போறது நினைச்சு சந்தோஷத்துல தூக்கமே வரலையா என்று கேட்கிறார். ஈஸ்வரி இதை கேட்டதம் கோபப்பட்டு செல்வி அமைதியா இரு என திட்டுகிறார்.
அதன் பிறகு பாக்யாவை கூப்பிட்டு உட்கார வைத்து ”நீ எவ்வளவு கஷ்டப்படுவேன்னு எனக்கு புரியுது”’ என்று சொல்ல பாக்கியா ”எனக்கு என்ன கஷ்டம்… நானா வலியை தாங்கிக்கிட்டு குழந்தையை பெத்துக்க போறேன்” என்று சொல்ல மீண்டும் செல்வி சிரிக்கிறாள்.
அதன் பிறகு அமிர்தா எழில் குழந்தை பற்றி பேச எழில் இப்போதைக்கு படம் பண்ணி நல்ல இடத்துக்கு வரணும்… அதுக்கப்புறம் குழந்தையை பத்தி எல்லாம் யோசிக்கலாம் என்று சொல்கிறான்.
இதை தொடர்ந்து கோபி வாக்கிங் சென்று விட்டு வீட்டுக்குள் நுழைய ராதிகாவிடம் கொடுத்த வார்த்தை ஞாபகம் வர பயந்து கொண்டு உள்ளுக்குள் நுழைய எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க கோபி உண்மையை சொல்லப்போக ஈஸ்வரி கண்ணை காட்டி துரத்தி விடுகிறார்.
சொல்லாமலே தவித்த கோபி… மொத்தமாக உடைத்து பாக்கியா… ‘Baakiyalakshmi’ இன்றைய எபிசோட்!
கோபி மேலே வர ராதிகா விஷயத்தைச் சொல்லிட்டீங்களா என்று கேட்க எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க அதனால சொல்லல என்று சொல்ல அப்போ நான் உங்களுக்கு இரண்டாம் பட்சம் தான் என்று கோபப்படுகிறாள். உடனே உண்மைய சொல்லுங்க இல்ல நான் நானே சொல்லிட்டு கிளம்பி போயிட்டே இருப்பேன் என்று அதிர்ச்சி கொடுக்க நைட்டு வரை டைம் கேட்கிறான் கோபி. இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.