விஜய் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சிரீயல் ‘செல்லம்மா’. ஆரம்பத்தில் TRPயில் 4 ரேட்டிங்கிற்கு மேல் கொடுத்துவந்த இந்த சீரியல் கடந்த பல மாதங்களாக சரிவை சந்தித்துவருகிறது. நேற்று வெளியான ரேட்டிங்கிலும் 3 TRPயில் இருந்து 2.74 என இறங்கிவிட்டது. இதனால் ‘செல்லம்மா’ சீரியலை வரும் செப்டம்பர் 14-ம் தேதியோடு முடிவுக்கு கொண்டுவருகிறது விஜய் டிவி.
விஜய் டிவியில் 2022 முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவந்த சீரியல் தான் ‘செல்லம்மா’. இயல்பான சீரியல் கதையான பணக்கார விட்டு குழந்தை பிறந்ததும் கைமாற்றப்பட்டு, பின் அதே வீட்டுக்கு வேலைக்கார பெண்ணாக வரும் கதை தான் இதுவும். அனால் அதில் காதல், கல்யாணம், கோபம் என பல உணர்வுகளை கலந்து அக்மார்க் சீரியல் கதையாக விஜய் டிவி பார்வைலர்களை ஈர்த்தது.
இந்த சீரியல் தற்போது இரண்டு வருடங்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. கதையை தொடர முடியாமலும், பல கதை திருப்பங்களுக்கு பதில் கிடைத்தாலும் ‘செல்லம்மா’ சீரியல் தெப்போது முடிவுக்கு வந்துள்ளது.
Vijay Tv – யில் ஒளிபரப்பாகும் புது Serial “கண்மணி அன்புடன்”…
செல்லம்மாவுக்கு பதிலாக ‘கண்ணே கலைமானே’ தொடரை தயாரித்துவந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு புதிய சீரியல் ப்ரொடக்ஷன் கொடுக்கப்பட்டிருகிறது. ‘கண்மணி அன்புடன்’ எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்த சீரியலில் ‘கண்ணே கலைமானே’ சீரியல் ஹீரோ மாஸ்டர் நந்தா விலகிய பிறகு ஹீரோவாக நடித்த நவீன் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக பெங்களூருவைச் சேர்ந்த துஷிதா என்பவர் நடிக்கிறார். மற்றொரு கதானாயகியாக தெலுங்கு சீரியல் நடிகை மதுமிதா ‘கண்மணி அன்புடன்’ சீரியலில் இணைகிறார். முக்கோணக் காதல் கதையான இந்த சீரியல் இந்தி சீரியலான ‘கட்டா மிட்டா பியார் ஹே’ சீரியலின் ரீமேக்!