2022 -ஆம் ஆண்டு முதல் Vijay Tv-யில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியல் திடீரென்று இறுதிக்கட்டத்தை எட்டி சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ளது.
சீரியலுக்கு பெயர் போன Vijay Tv-யில் அடுத்தடுத்த புது சீரியல்களின் அப்டேட் வரவுள்ள நிலையில், தற்போது செல்லம்மா சீரியல் முடிவடையவுள்ளது. 2022 முதல் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் 2 ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
தற்போது அந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதில் நடித்த நடிகர், நடிகைகள் முடிவுக்கு வரும் செல்லம்மா சீரியலால் ஒருவரை ஒருவர் அரவணைத்து அன்பை பரிமாறிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப் போவதால் சில சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டும், சில சீரியல்கள் முடிவுக்கு கொண்டு வருவது வழக்கமானது. அந்த வகையில் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளது.
செல்லம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் அன்ஷிதா மற்றும் அர்னவ் நடித்திருக்கின்றனர். குழந்தை நட்சத்திரமாக கண்மணி நடித்திருக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகி ஏற்கனவே கல்யாணம் முடித்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். பிறகு அவருக்கு தன்னுடைய மாமா பையன் கதாநாயகன் அர்னவ் மீது காதல் ஏற்ப்பட்டது. தற்போது இந்த சீரியலில் பல பிரச்சினைகள் கொண்டு முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. 550 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது.
சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அர்னவ், அவருடைய குடும்பப் பிரச்சனை காரணமாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற போது கூட அவருக்கு பதிலாக மாற்று ஹீரோவை வைத்து எடுக்காமல் கதையில் மாற்றம் செய்தனர். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் அன்ஷிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு நகைச்சுவையில் கலக்கி வந்தார்.
அன்ஷிதா, அர்னவ், கண்மணி, ஸ்ரீயா சுரேந்திரன், ஆனந்த கிருஷ்ணன், ஜாபின் ஜான், சஹானா ஸ்ரீ, அனுராதா, கீர்த்தனா போன்றோரும் நடித்துள்ளனர். செல்லம்மாவிற்கு வளைகாப்பு நடைபெறுவது போல ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் இத்துடன் சீரியல் முடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.