Home Serial ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’…. Zee Tamil’ன் புதிய சீரியல்!

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’…. Zee Tamil’ன் புதிய சீரியல்!

by Santhiya Lakshmi

Zee Tamil தொலைக்காட்சி அடுத்தடுத்து புதிய சீரியல்களை களமிறக்கத் தயாராகிவிட்டது. ப்ரைம் டைமில் புதிதாக இரண்டு சீரியல்களும், மதிய நேரத்தில் புதிதாக இரண்டு சீரியல்களும் என நான்கு சீரியல்கள் வெளிவர இருக்கின்றன. 

ஜீ தமிழில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்கிற பெயரில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் டிவிக்கு வந்தார் ஜெய் ஆகாஷ். இலங்கைத் தமிழரான இவர் ‘ரோஜா கூட்டம்’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்தவர். தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தவரை ஜீ தமிழ் டிவிக்கு கொண்டுவந்தது. ‘நீதானே என் பொன்வசந்தம்’ சீரியல் மூலம் டிவி ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஹீரோவாக உயர்ந்தார் ஜெய் ஆகாஷ். அதேப்போல் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மூலம் புகழ்பெற்றவர் ரேஷ்மா. இந்த சீரியலைத்தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ‘அபி டெய்லர்’, விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ ஆகிய தொடர்களில் நடித்தார். இப்போது ஆரம்பித்த அதே இடத்துக்கு ரேஷ்மாவும் வந்துவிட்டார்.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்கிற பெயரில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் ஜெய் ஆகாஷும், ரேஷ்மாவும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தத்தொடரில் ரச்சிதா நடிப்பதாக இருந்து அவருக்கு பதில் ரேஷ்மா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். திருமணமாகாத 45 வயது ஆணுக்கும், 30 வயது முதிர்கன்னிக்கும் இடையேயான காதலும், திருமண வாழ்வும், கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சிக்கல்களுமே இந்தத்தொடரின் மையமாக இருக்குமாம். 

ஜூன் மாதம் இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. விரைவில் ப்ரோமோ வெளியாகும் என்கிறார்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.