Zee Tamil டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்புவதை நிறுத்திவைத்திருந்தார்கள். ஆனால், ஜீ குழுமம் காஸ்ட் கட்டிங் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதால் ஒரிஜினல் சீரியல்கள் எடுப்பதற்கான பட்ஜெட் இல்லையாம். அதனால் இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பும் முடிவை எடுத்திருக்கிறது ஜீ தமிழ்.
தமிழ் டிவி மார்க்கெட்டில் சன், விஜய்க்கு அடுத்த பெரிய சேனல் Zee Tamil. பல்வேறு ஹிட் சீரியல்களை ஒளிபரப்பிவரும் ஜீ தமிழில் புதிதாக இரண்டு டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.
‘’Pyar Ka Pehla Naam: Radha Mohan’’ என தற்போது ஜீ டிவி இந்தியில் ஒளிபரப்பாகும் சீரியலை அப்படியே டப்பிங் செய்து ‘நானே வருவேன்’ என்கிற பெயரில் வரும் மே 27 முதல் மதியம் 3 மணி முதல் 4 வரை ஒளிபரப்ப இருக்கிறது ஜீ தமிழ். இந்தியில் தற்போது 700 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் ஏற்கெனவே தமிழில் ஹிட் அடித்த ‘யாரடி நீ மோகினி’ சீரியலின் ரீமேக் என்பதுதான் வேடிக்கை. ஏற்கெனவே தமிழில் ஒளிபரப்பாகி ஹிட் அடுத்து இந்தியில் ரீ-மேக் செய்யப்பட்ட சீரியலை, மீண்டும் தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கும் ஜீ தமிழின் முடிவை விமர்சித்துவருகிறார்கள் டிவி ரசிகர்கள். ‘நானே வருவேன்’ 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதோடு ஜீ டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘பாக்யலட்சுமி’ தொடரையும் டப்பிங் செய்து இரவு 10.30 மணிக்கு ‘லட்சுமி கல்யாணம்’ என்கிற பெயரில் ஒளிபரப்ப இருக்கிறது ஜீ தமிழ். ‘நளதமயந்தி’ சீரியல் வரும் சனிக்கிழமையோடு முடிவடைவதால் ‘லட்சுமி கல்யாணம்’ வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சுமிக்கும் இந்த பாக்யலட்சுமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2021 முதல் ஜீ டிவியில் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை நெருங்க இருக்கிறது.
‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’…. Zee Tamil’ன் புதிய சீரியல்!