ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ‘சீதாராமன்’ தொடரை இந்த வாரத்தோடு நிறுத்துக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறது டிவி நிர்வாகம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘சீதாராமன்’ தொடருக்கு அமோக வரவேற்பு இருந்தது.
![ரேஷ்மாவின் 'Seetha Raman' இனியில்லை... முடிவுக்கு வரும் Zee Tamil சீரியல்! 2 Seetha Raman](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/109781577-1024x574.webp)
தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த இந்த சீரியலில் பாக்யலட்சுமி தொடரில் நடித்துவந்த ரேஷ்மா வில்லியாக நடித்தார். முதலில் சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் மூலம் புகழ்பெற்ற பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடித்த இந்த சீரியலிலில் இருந்து அவர் விலக பின்னர் ‘மிக மிக அவசரம்’ படத்தில் நடித்த ஶ்ரீபிரியங்கா ஹீரோயினாக நடித்தார். விஜய் டிவியில் ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் மூலம் அறிமுகமான ஜே டிசோசா இந்தத்தொடரின் நாயகனாக நடித்துவந்தார்.
ரேஷ்மாவின் ‘Seetha Raman’ இனியில்லை… முடிவுக்கு வரும் Zee Tamil சீரியல்!
7.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த இந்த சீரியலின் டிஆர்பி நன்றாக இருந்த நிலையில் திடீரென 6 மணிக்கு இந்த சீரியல் மாற்றப்பட்டது. நேரம் மாற்றப்பட்டதில் இருந்தே டிஆர்பியில் தடுமாறிவந்த இந்த சீரியலுக்கு எண்ட் கார்டு போட்டிருக்கிறது ஜீ தமிழ்.
‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’…. Zee Tamil’ன் புதிய சீரியல்!