ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதிய நேரத்தொடர்களை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வேலைகள நடந்துகொண்டிருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக இரண்டு தொடர்கள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.
ஜீ தமிழில் மதியம் 1 மணி முதல் 3 மணிவரை நேரடி தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகிவருகின்றன. 1 மணிக்கு இந்திரா, 1.30 மணிக்கு இதயம், 2 மணிக்கு கனா, 2.30 மணிக்கு சண்டைக்கோழி என இந்த நான்கு சீரியல்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை.
400, 500 எபிசோடுகளைக் கடந்துவிட்டதால் தற்போது இந்திரா மற்றும் சண்டைக்கோழி தொடர்களை நிறுத்துவது என்கிற முடிவை எடுத்திருக்கிறது ஜீ தமிழ். வரும் 17-ம் தேதியோடு இந்த தொடர்கள் முடிவுக்கு வருகின்றன. இரண்டு சீரியல்களின் க்ளைமேக்ஸ் ஷூட்டுமே நேற்றோடு முடிந்துவிட்டது.
ஜீ தமிழின் புதிய மதிய நேர சீரியல்கள் செப்டம்பர் முதல் ஒளிபரப்பாகும். அதுவரை டப்பிங் தொடர்களை ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறார்கள்.