நிஜத்தில் ஏற்கனவே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் நடிகர்கள் ஸ்ரேயா மற்றும் சித்து. இவர்கள் தற்போது திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்கவுள்ள சீரியல் தான் ‘வள்ளியின் வேலன்‘. ஜீ தமிழ் சேனலில் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு இந்த புது சீரியல் ஒளிபரப்பாக போகிறது.
‘வள்ளியின் வேலன்’ சீரியலில் தன்னுடைய அப்பாவின் பாசத்துக்காக எங்கும் மகளாக ‘வள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை ஸ்ரேயா. பெரிய கூட்டுக்குடும்பத்தில் பிறந்து தன்னுடைய தாய் செய்த தவறினால் அப்பாவால் ஒதுக்கிவைக்கப்பட்ட மகளாக வளர்க்கிறார். இவரின் இந்த பாசத்தை புரிந்துகொள்ளும் ‘வேலன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சித்து.
சரிகிறதா Vijay TV’யின் செல்வாக்கு… ரூரல் ரேட்டிங்கில் முந்தும் Zee Tamil!
ஏற்கனவே சன் டிவியில் ‘கண்ணான கண்ணே’ என்ற சேரியலுடன் இந்த புது சீரியலை ஒப்பிட்டும் பேசுகிறார்கள் ரசிகர்கள். ஆனால இது ஜீ தொலைக்காட்சியின் தெலுங்கு மொழியில் உருவாக்கி இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அம்மாயி காரு’ என்ற சீரியலின் தமிழ் உருவாக்கம். இந்த சீரியலில் சாக்ஷி சிவா, கன்யா பாரதி உடன் நடிக்கிறார்கள்.