வரும் Big Boss சீசன் 8 -ல் பல பிரபலங்களின் பெயர் அடிபட்டுவந்த நிலையில் விஜய் டிவியில் இருந்து அதிகமான பெயர்கள் இடம்பெற்றது. அதில் சீரியல் நடிகை பவித்ரா ஜனனியும் ஒருவர்.
பவித்ரா ஜனனி சென்னையில் டிசம்பர் 4 -ஆம் தேதி 1992 -ல் பிறந்தார். கல்லூரி படிப்பை மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் படித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றார். பின்னர் விஜய் டிவியில் 2014 -ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த Office சீரியலில் வனிதா என்ற சிறிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் துளசி கேரக்டரில் நடித்திருந்தார்.
சரவணன் மீனாட்சியின் மற்றொரு கதையில் ராஜேஸ்வரி கேரக்டரில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பகல் நிலவு, ராஜா ராணி சீரியலில் நடித்திருந்தார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வந்த நிலையில் 2018 -ல் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் மலர்விழி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து கவனம் பெற்றார்.
நடிக்க தொடங்கிய 6 வருடங்கள் கழித்து சீரியலில் லீட் ரோலில் நடித்த பவித்ரா அடுத்து 2021 -ல் வெளியான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அபிநயா கேரக்டரில் நடித்து வருகிறார்.
சீரியலில் ஒரு புறம் நடித்து வந்தாலும் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கு பெற்று வந்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பவித்ரா இன்ஸ்டாகிராமில் 934K பாலோவர்ஸ் கொண்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் கமல் ஹாசன்! உண்மையான காரணம் என்ன?
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அமைதியவும், எதார்த்தமாக பேசி வரும் பவித்ரா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாலும் அதே மாதிரியான குணத்தில் இருப்பாரா அல்லது அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுமா என பார்க்கலாம்.
விஜய் டிவி சீரியலில் நடிகையாக இருந்து வரும் பவித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதன் மூலம் பின்னாட்களில் சீரியலை தாண்டி பட வாய்ப்புகள் வர அதிகம் வாய்ப்புள்ளது.
இந்த சீசனில் அதிகளவு பெண்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் பவித்ரா ஜனனி பிக் பாஸ் வீட்டிற்கு நுழையும் பட்சத்தில் மற்ற பெண் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருப்பாரா என விரைவில் தெரிய வரும்.