ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான singing ரியாலிட்டி ஷோ “SAREGAMAPA Season 4” ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது இறுதி சுற்றை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் நடுவர்களாக பாடகர் ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், பாடகி ஸ்வேதா மோகன், மற்றும் சைந்தவி அங்கம் வகித்து வருகின்றனர். இவர்களோடு சிறப்பு நடுவராக நடிகை அபிராமியும் உள்ளார். ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு எபிசோடுக்கு வித்தியாசமான தலைப்புகள் வைக்கப்படும். சென்ற வாரம் முதல், “Road to Finale” பயணம் தொடங்கியது, அதில் தலைப்பாக “ஹீரோ ஹீரோயின் சுற்று” என்று அமைந்த நிலையில், அந்த எபிசோடில் சிறப்பாக பாடிய மகிழன் பரிதி முதல் பைனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வாரம் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோட் “பாடும் நிலா” மறைந்த பாடகர் SPB-ஐ கொண்டாடும் விதமாக ‘SPB Round’ என தலைப்பு வைக்கப்பட்டு சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த எபிசோடுக்கு சிறப்பு நடுவராக பாடும் நிலா SPB அவர்களின் மகனான SP சரண் இணைய உள்ளார். இதில் பாடும் நிலா SPB ஓடு இருக்கும் நினைவுகளை நடுவர்களான பாடகர் ஸ்ரீநிவாஸ், கார்த்திக், மற்றும் விஜய் பிரகாஷ் உணர்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர்.
Sa Re Ga Ma Pa Li’l champs சீசன் 4 – நேர்முகத் தேர்வு ஆரம்பமாகிறது!!
SPB அவர்கள் பாடகராக மட்டும் அல்ல தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக கலைஞர் ஆக பல்வேறு சாதனைகளை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட 16 மொழிகளில் புரிந்து, செப்டம்பர் 25, 2020-ல் covid-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.