ரியாலிட்டி ஷோ என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது விஜய் டிவி தான். அந்த அளவுக்கு ரியாலிட்டி ஷோக்களில் தனித்தன்மையுடன் புது விதமாக மக்களுக்குப் பிடித்தவண்ணம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருவார்கள். அந்த வழியில் Mr and Mrs Chinnathirai நிகழ்ச்சியும் ஒன்று. தற்போது குக் வித் கோமாளி, டிக் டிக் டிக், அது இது எது போன்று நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகிக்கொண்டு இருந்தாலும் மக்கள் மிஸ்டர் அண்ட் மிசெஸ் சின்னத்திரை எப்போது வரும் என்று தான் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
மக்களின் கேள்விக்குப் பதில் அளிக்கும் வண்ணம் சமீபத்தில் மீண்டும் மிஸ்டர் அண்ட் மிசெஸ் சின்னத்திரை சீசன் 5 வரப்போவதாக ப்ரோமோ வழியாகக் கூறியிருந்தனர் விஜய் டிவி. அந்த ப்ரோமோவில் வழக்கம்போல் மா கா பா ஆனந்த் தொகுப்பாளராகவும் அவருடன் அறந்தாங்கி நிஷா இணை தொகுப்பாளராக இணையுள்ளது தெரியவந்துள்ளது. அந்த ப்ரோமோ மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றாலும் நடுவர்களைப் போட்டியாளர்களும் யார் யார் என்பது ஆர்வத்தைத் தூண்டியுள்ளது என்றே சொல்லலாம்.
![மீண்டும் வருகிறது மக்களின் favorite ஷோவான 'Mr and Mrs Chinnathirai'! 2 Mr and Mrs Chinnathirai season 5 host](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/06/makapa-and-nisha-1024x576.jpg)
ஜூலை 29 முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30க்கு Mr and Mrs சின்னத்திரை சீசன் 5 ஒளிபரப்பாகும் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக கோபிநாத் மற்றும் நடிகை ராதா என்று சமீபத்தில் மற்றொரு ப்ரோமோ மூலியமாக அறிவித்தனர். தேவதர்ஷினி நடுவராக இல்லை என்று ரசிகர்கள் வருத்தத்திலிருந்தாலும் மீண்டும் ஒரு புது பொலிவுடன் வரவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்புடன் மக்கள் காத்திருக்கின்றனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.